Saturday, July 9, 2011

தமிழனாய் நாம் இன்று உணர்ந்து செயலாற்றவேண்டியது!!!

ஒன்று எனக்கு இன்றும் விளங்கவில்லை யார் உயிர் பெரிதென்று அது இந்தியாவின் இரு பெரும் தலைகள் இறந்த கதை ஆம் இந்திராவா??? ராஜீவா? யார் உயிர் பெரிது???

இந்திராகாந்தியை சீக்கியன் கொன்றான் அவன் சார்ந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரை அரவணைத்து சிவப்பு கம்பள வரவேற்புடன் பிரதமராகியிருக்கிறார் சோனியா ஆனால் ராஜீவ்காந்தியை தமிழன் கொன்றான் என்கின்றனர் அதற்கு பழிதீர்க்க லட்சோபலட்ச எம் தமிழ் உறவுகளை அழித்தும் வெறி அடங்கியதாய் தெரியவில்லை அந்த சோனியாவிற்கும் ராகுலுக்கும்.

பிரான்ஸ்லே சீக்கியனுக்கு மயிர் பிரச்னை என்றவுடன் இந்திய பிரதமராய் இருந்த மன்மோகன் விரைந்து சென்று தீர்வுகண்டார் அனால் தொட்டுவிடும் தொலைவில் உள்ள எம் ஈழத்திலே என் உறவுகள் உயிர்வாழ போராடிய போது தமிழனின் உயிர் என் மயிருக்கு சமம் என இருதுவிட்டார் மன்மோகன் சிங் அப்படியானால் சீக்கியனின் மயிர் உயிருக்கு சமம் தமிழனின் உயிர் அவர்களின் மயிருக்குகூட சமம் இல்லையா??? எங்கேயடா சென்றது உங்களின் ஜனநாயக மனிதாபிமானம்???

பெரிய காரணம் ஏதும் இன்றி உன் மாமியாரை கொன்றவனுக்கு மனதிலே இடமளித்து இந்திய தேசத்து பிரதமராய் சிம்மாசனத்தில் அனால் உன் கணவனை எதற்காக கொன்றனர் என்ற காரணத்தை நன்கு அறிந்தவளாய் இருந்தும் அழிக்கிறாய் தேடி தமிழனை இன்றுவரை ஈழத்திலே இனிமேல் இந்திய அரசியலிலா??? ஏய் ரத்தகாட்டேறி உன் கணவன் ஒருவனின் உயிர்காக இன்னும் எத்துனை உயிர்களை உறிஞ்ச போகிறாய்? உலகே கூறுகிறது உன் கூட்டாளி போர்க்குற்றவாளி என்று உன்னின் பதில் தேவை இல்லை தமிழனுக்கு... காலம் உணர்த்தும் உனக்கு தமிழன் யார் என்று?

உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக நேரு குடும்பம் என்பதை மறைத்து காந்தி என அடைமொழியிட்டவர்கள் நீங்கள் அதே அடைமொழியுடன் இன்னும் எத்தனை காலம் ஆளுவீர்கள் பார்க்கலாம் அதையும் உன்னின் இந்த அகம்பாவ ஆட்சிகாலத்திலேயே எமக்கான தமிழ் ஈழம் மலரும் எம் உறவுகள் அங்கே சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் அப்போது புரியும் உனக்கு தமிழன் யாரென்று???

இந்திராகாந்தியை கொன்ற வீர சீக்கியர்களுக்கு இந்திய தேசத்தின் தலைமையிடம் ராஜீவை கொன்றவர்கள் என கூறும் கோழை தமிழர்கள் அழிக்கப்படவேண்டியவர்களா???

தமிழினமே விழித்துக்கொள்!!! சோனியா அரசின் கையாலாகாத தனத்தால் சீனர்கள் இலங்கையிலே ஆழமாக காலூன்றிவிட்டார்கள் வடக்கிலே சீனர்களின் ஆக்கிரமிப்பை தட்டிகேட்க்கமுடியாத எம் இந்திய அரசு நாளை தெற்கிலே இலங்கையில் இருந்து சீனா தாக்குதல் தொடுத்தால் அங்கே பாதிப்பதும் தமிழன் தான் ஆம் இன்று அருணாச்சல் பிரதேசத்தில் நடப்பது தான் நாளை இங்கேயும் நடக்கும் ஆதலால் இப்போதே விழித்துக்கொள் தமிழினமே! எதிர்காலத்தில் எமது பாதுகாப்பு கருதியேனும் எழு கோடி மக்களின் ஒருமித்த குரலாய் ஒலிக்கட்டும் தனி தமிழ் ஈழமே ஒரே தீர்வு! இந்திய அரசே ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவி என்று!

என்றும் தமிழுணர்வுடன்

பி.ரா.வ

Saturday, July 2, 2011

கருணாநிதியின் அசையா சொத்துக்கள்.

நேற்று கனிமொழி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டதும், பலர் மகிழ்ந்தாலும், சிலர் வருந்தவே செய்தார்கள். ஒரு சிலர், கனிமொழி பாவம் என்றார்கள். மற்றும் சிலர், கருணாநிதிக்கு இந்த முதிர்ந்த வயதில், எத்தனை துன்பம் என்றார்கள்.

இவர்களுக்கு பாவம் பார்க்கலாமா.... ?
கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், சவுக்கு விசாரித்து சேகரித்த பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல. இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.

1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி

3. முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி

4. சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி

5. மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி

6. அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி

7. செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.

8. சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி

11. மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.

12. உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.

13. கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

14. கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.

15. ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.

16. கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.

17. சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். 5 கோடி.

18. சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

19. கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.

20. பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.

21. பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80 கோடி.

22. மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.

23. பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.

24. மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.
25. மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள். மதிப்பு 30 லட்சம்.

26. சன் டிவியின் டெல்லி அலுவலகம். மதிப்பு 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

30. முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)

31. ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.

32. தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்

33. தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம், கருணாநிதி பெயரில்.

34. தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு 1 கோடி.

35. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.

36. மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

41. மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.

42. மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.

43. மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி.

44. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.

49. தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.

50. சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு 3 கோடி.

52. காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.

53. சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.

54. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.

55. மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.

56. மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.

57. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.

58. சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற முகவரியில் 5 கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.

59. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.

60. கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.

61. ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.

உறுதி செய்யப் படாத சொத்துக்கள்

62. அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.

63. கூர்க் பகுதியில் காபித் தோட்டம்.

64. தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.
65. எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.

66. மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.

67. சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப் பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.

68. கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்....... இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா ?